full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

2.0 படத்தின் கதை!

இயக்குநர் சங்கர்- ரஜினி – அக்‌ஷய் குமார் – ஏ.ஆர்.ரஹ்மான் – ஏமி ஜாக்சன் உள்ளிட்டோரின் இரண்டு வருட உழைப்பு “2.0”. எப்போதுமே தனது படம் பற்றிய தகவல் துளியும் கசியாமல் ரிலீசுக்கு முந்தின நாள் வரை பாதுகாக்கும் இயக்குநர் சங்கரையே இந்த முறை ஏமாற்றி இருக்கிறார்கள் “ஹேக்கர்கள்”.

அணுவாய் அணுவாய் செதுக்கி டீசருக்காக தயார் செய்து வைத்திருந்ததை அலேக்காக லவட்டி நெட்டில் அப்லோடி இருக்கிறார்கள் பாவிகள். லோ குவாலிட்டியாக இருந்தாலும் அந்த வீடியாக்கள் தாங்கி வந்த பிரம்மாண்டம் நம்மை பிரமிக்க வைத்தது என்பது தான் உண்மை. அந்த வீடியோக்களை பார்த்த போது, ஒரு வேளை கதை இப்படி இருக்குமோ என நமது சிறுமூளையில் மின்னிய பல்ப் சொல்லியது. அது இதோ உங்களுக்காக,

“உலகை அச்சுறுத்தும் அளவிற்கு அழிக்கும் ரோபோவாக உருவெடுத்த அக்சய் குமாரை அழிப்பதற்காக, முந்தைய “எந்திரன்” படத்தில் டிஸ்மாண்டில் செய்யப்பட்ட “சிட்டி ரோபோ”, “2.0” வில் மீண்டும் உருவாக்குகிறார் புரொஃபசர் வசீகரன்.

கழுகு உருவத்தில் மாறக் கூடிய சக்தி கொண்ட ரோபோவாக விளங்கும் அக்‌ஷய் குமார், உலகின் ஒட்டுமொத்த செல்ஃபோன்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மனித இனத்தையுமே அழிக்க நினைக்கிறார்.

அதை எதிர்த்து சண்டை போடும் சிட்டி ரோபோவும், அதற்கு உதவி செய்யும் ஏமி ஜாக்சன் ரோபோவும், வசீகரனும் பூமியை அக்‌ஷய் குமாரிடமிருந்து காப்பாற்றுகிறார்களா? என்பது தான் மீதி கதை.

“இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை” என்ற வசனத்தை வைத்துப் பார்க்கும் போது, அக்‌ஷய் குமார் ஒருவேளை ஏலியனாக இருந்தாலும் இருக்கலாம்..