full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் அதிரடி கைது

தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரின் பேரில் போக்கிரி பட ஒளிப்பதிவாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம் ஷியாம் கே நாயுடு. ஆனால்  வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஷியாம் கே நாயுடுவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.