full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பட நடிகை

பெங்களுருவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அஜித் பட நடிகையை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

 

 

 

 

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாவனா. ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ‘தீபாவளி’, ‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’ உள்பட பலபடங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இடம் பிடித்தார். பின்னர் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கன்னட பட தயாரிப்பாளரான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

 

 

 

 

பெங்களுருவில் தனது கணவருடன் வசித்து வந்த பாவனா, கொரோனா ஊரடங்கால் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், பாவனா அரசிடம் முறையாக பெற்று பெங்களுருவில் இருந்து கார் மூலம் கேரளாவிற்கு சென்றுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அவரை வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.