full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

சரஸ்வதி பூஜை விடுமுறையில் அறம் இருக்குமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `அறம்’, `வேலைக்காரன்’, `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, சயீ ரா நரசிம்மரெட்டி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.

இதில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் `வேலைக்காரன்’ படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக கூறப்படுகிறது.

சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் இருந்து வேலைக்காரன் படம் வெளியேறும் பட்சத்தில், நயன்தாராவின் அறம் அந்த இடத்தை நிரப்ப முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே ஜெய்யின் `பலூன்’, சந்தானத்தின் `சர்வர் சுந்தரம்’ படமும் அதேநாளில் தான் ரிலீசாக இருக்கிறது. இதன்மூலம் ஜெய் மற்றும் சந்தானம் படங்களுடன் நயன்தாரா படமும் இணையவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி’ படமும் செப். 29-ல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகியிருக்கும் `ஸ்பைடர்’ படம் செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இதுதவிர, விஜய் சேதுபதியின் `கருப்பன்’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் `செம’ உள்ளிட்ட படங்களும் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளை குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.