full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

சிக்கலில் ஆர்யா

தனியார் தொலைக்காட்சியில் ஆர்யா நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர், சினிமா தணிக்கை வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஜானகி அம்மாள் என்பவர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பெண்களின் மாண்பை கெடுக்கும் வகையில் உள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.

டிவியின் சிஇஓ, நடிகர் ஆர்யா, நடிகை சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.