full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

மூன்றாம் முறையாக இணைகிறதா அட்லீ – விஜய் கூட்டணி??

நடிகர் விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், சதீஸ், யோகிபாபு, ரதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சன் பிக்சர்ஸ்” சார்பில் கலாநிதி மாறன் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

பொதுவாக, ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னதாகவே அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பதே விஜய்யின் வழக்கம். அந்த வகையில் தனது அடுத்த படத்தில் இயக்குநர் அட்லீயுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. முன்னதாக இயக்குநர்கள் பா.இரஞ்சித், வினோத், பேரரசு, மோகன் ராஜா ஆகியோரிடம் கதை கேட்டதாகவும், அட்லீ சொன்ன கதையையே விஜய் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் உண்மை எனில், இது விஜய்யும் அட்லீயும் இணையும் மூன்றாவது படமாக அமையும். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் “தெறி”, “மெர்சல்” இரண்டு படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்றன.

இதற்காக “ஏ.ஜி.எஸ்” நிறுவனத்திடம் அட்லீ கதை சொல்லிய போதே, அவர்கள் பல கண்டிஷன்களை விதித்தாக சொல்லப்படுகிறது. “மெர்சல்” படத்திற்கு பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்ய வைத்ததைப் போல இல்லாமல், இறுதி செய்யப்பட்ட பட்ஜெட்டில் முடித்துத் தர வேண்டும் என அட்லீயிடம் கண்டிஷன் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித்திற்கு ஒரு சிவா.. விஜய்க்கு ஒரு அட்லீ..