full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

வில்லி வேடத்தில் நடிக்க ஆசை- பிரியாமணி

நடிகை பிரியாமணி 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கில் நடிகை பிரியாமணி அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் விராட பருவம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறேன். ஊரடங்கில் கதைகள் கேட்கிறேன். சினிமா துறையில் ஒரு காலத்தில் கதாநாயகனுக்கு ஒரு மரியாதை கதாநாயகிக்கு ஒரு மரியாதை என்ற வித்தியாசம் இருந்தது. அது இப்போது மாறுகிறது. காஜல் அகர்வால், தமன்னா, நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் மார்க்கெட்டை பொறுத்து சம்பளம் வாங்குகிறார்கள். இதை பார்த்து சந்தோஷப்படுகிறேன்.

எனக்கு பணத்தின் மீது ஆர்வம் இல்லை. இப்போது எனக்கு கொடுக்கும் சம்பளத்தில் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு நல்ல கணவர். குடும்பம் கிடைத்து உள்ளதால் சந்தோஷமாக இருக்கிறேன். திருமணமாகி 3-வது நாளே படப்பிடிப்புக்கு போனேன். கணவர் குடும்பத்தில் எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதனால் சினிமாவில் நீடிக்க விரும்புகிறேன்.

எனது கால்ஷீட் விஷயங்களை கணவர்தான் கவனித்து கொள்கிறார். ரம்யாகிருஷ்ணன் நடித்த நீலாம்பரி மாதிரி ஒரு வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு ஆசையாக உள்ளது. ஒரு முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது. படப்பிடிப்புகளை இப்போது ஆரம்பிப்பதுபோல் தெரியவில்லை. இதனால் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.” இவ்வாறு பிரியாமணி கூறினார்.