full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்;பாலிவுட் நடிகர் சல்மான்கான்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார்.

உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

ஆனால், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என எனது
இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனக்காக நீங்கள் நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார்…’ என பதிவிட்டுள்ளார்.