full screen background image
Search
Wednesday 17 April 2024
  • :
  • :
Latest Update

கொரோனா ஊரடங்கில் எல்லோரும் வீட்டில்தான் முடங்கி இருக்க வேண்டி உள்ளது- நித்யாமேனன்

அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நிஜ வாழ்க்கையையும் சினிமாவையும் நான் ஒன்றாக கலக்க மாட்டேன். படப்பிடிப்புக்கு போனால் அந்த வேலையை வீட்டுக்கு சுமந்து கொண்டு வரமாட்டேன். அதே மாதிரி படப்பிடிப்பு அரங்கில் அடியெடுத்து வைத்து விட்டால் எனது சொந்த வாழ்க்கை அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் எதையும் தொழில் மேல் விழ விடமாட்டேன்.

சிலநேரம் நாம் செய்யும் கதாபாத்திரங்கள் சொல்ல முடியாத தாக்கம் ஏற்படுத்தும். சில வேடங்கள் நமக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும். இப்போதைய கொரோனா ஊரடங்கில் எல்லோரும் வீட்டில்தான் முடங்கி இருக்க வேண்டி உள்ளது. இந்த ஓய்வு நேரத்தை நம்ம பற்றி நாமே தெரிந்து கொள்ளவும் நம்மை விமர்சனம் செய்யவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனக்குள் இருக்கும் குறைகள் எது என்று கண்டுபிடித்து விட்டேன். கொரோனா வாழ்க்கையை போராட்டமாக மாற்றிவிட்டது. நிறைய பேர் சாப்பாட்டுக்கு வழியின்றி போராடுகிறார்கள். எங்களை போன்றவர்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து போராடுகிறோம். எல்லோருமே ஒருவிதத்தில் போராடிக்கொண்டு இருக்கிறோம்”. இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.