full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

கபடி வீரனின் கரடுமுரடான காதல் கதை அருவா சண்ட

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “அருவா சண்ட”. தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி “ படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றவரும் “ரணதந்த்ரா “ சிலந்தி – 2 போன்ற படங்களின் இயக்குனருமான ஆதிராஜன் அடுத்து கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் புதிய படம் “அருவா சண்ட“.

தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆவணக் கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக உருவாகி வருகிறது இப்படம். தமிழர்களின் தேசிய அடையாளமான கபடியின் பெருமைகளை உலகறிய உரக்கச் சொல்ல வருகிறது “அருவா சண்ட“.

இந்த படத்தின் கதை நாயகனாக ராஜா நடிக்கிறார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை திரையில் பார்த்திராத புதுமையான அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், வில்லானாக ஆடுகளம் நரேனும் நடிக்கிறார்கள். மற்றும் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, நெல்லை சிவா, பிளாக்பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை புகழ் சரத், அழகப்பன் ஆகியோர் கூட்டணி அமைத்து காமெடியில் கலக்க போகிறார்கள்.

போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம், தகராறு உட்பட பல படங்களுக்கு இசையமைத்த தரண் இசையமைக்கும் 25 – வது படம் இது. அமர்களமான ஐந்து பாடல்களை 7 வது முறையாக தேசிய விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார்.

கன்னடத்தில் ஸ்டைல் கிங், மிரர் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் பாண்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். “ காஸ்மோரா, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், வல்லினம் படங்களுக்கு எடிட்டிங் செய்தவரும் தேசிய விருது பெற்றவருமான வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். படப்பிடிப்பு வரும் ஜூன் மாத இறுதியில் தொடங்குகிறது. புதுக்கோட்டை, தஞ்சை, மற்றும் மதுரை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.