full screen background image
Search
Wednesday 24 April 2024
  • :
  • :
Latest Update

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இரண்டாம் பாகம்!!

சூர்யா நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தத் திரைப்படம் “அயன்”. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் தான் சூர்யாவிற்கு வசூல் ரீதியாக மாபெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். அதன் பிறகு சூர்யாவும், கே.வி.ஆனந்தும் இணைந்த “மாற்றான்” திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. இந்தத் தகவலை இயக்குநர் கே.ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

அதன்படி, அந்தப் படத்தை “லைகா புரொடக்‌ஷன்ஸ்” தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மீண்டும் கே.வி.ஆனந்துடன் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளராக கேவ்மிக் ஆரியும், கிரண் கலை இயக்குநராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கதாநாயகி யார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்தப் படம் அயன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.