full screen background image
Search
Thursday 28 March 2024
  • :
  • :
Latest Update

குழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்

 

 

தற்போது அண்மையில் தமிழ்நாட்டில் , இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும் , கடத்தப்படுவதும் , ஆதரவற்று இருப்பதும் , கொல்லப்படுவதும்  இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை . இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை .நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும் , ஆதரவற்ற  குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை .

உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் வர வேண்டும் .

அந்தக்காலத்தில் ஒருவர் வீட்டில் இருக்கும் குழந்தையை பற்றி பக்கத்துக்கு வீட்டு ஆட்களுக்கு தெரியும் . ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தார்கள்.அப்பொழுது ஒரு பாதுகாப்பு வளையம் இயற்கையாகவே இருந்தது . தற்போது அந்த மாதிரியான எண்ணங்கள் மிக குறைவாகவே உள்ளது . குழந்தைகள் பாதுகாப்பு ,அக்கறை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் .ஊடகங்கள் நினைத்தால் இந்த செய்தியை , விழிப்புணர்வை லட்சக்கணக்கான  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து செல்லலாம் .

குழந்தைகள் பெற்றோர்களின் கண்காணிப்பிலோ உள்ளது ஒருவருடைய கண்பார்வையிலேயே இருக்க வேண்டும் . எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்ல கூடாது .நம் இந்திய கலாச்சாரமே ஒருவருக்கொருவர் பங்கிட்டு வாழ்வது தான் . இந்த குழந்தை பாதுகாப்பிலும் அப்படிப்பட்ட எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும் . தற்போது டெக்னலாஜி பெரியதாக வளர்ந்து இட்டது . பெரும்பாலான மக்கள் செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் . இதனால் கூட குழந்தைபாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்படுகிறது .எங்கள் பீஸ் பார் சில்ரன் (PEACE FOR CHILDRN) அமைப்பின் மூலம் குழந்தை கல்வி , குழந்தை காணாமல் போகுதல் ,  குழந்தைகளுக்கான பல பிரச்சனைகளை தீர்வு கொண்டுவருகின்றோம் .

இந்த மாதிரியான விஷயங்களை செய்தித்தாள்கள் மூலமாகவோ , அல்லது கிடைக்கும் தகவல்களை வைத்து எங்கள் PFC (PEACE FOR CHILDREN ) அமைப்பின் குழுவினர்கள் அந்தந்த இடத்திற்கு சென்று உதவிகளை செய்து வருகிறார்கள் . ஆனால் பல தகவல்கள் முழுமையாக வராமல் , தொலைபேசி எண்ணோ அல்லது தொடர்பாளர் முகவரியோ இல்லாமல் பல செய்திகள் கிடைக்கிறது . எங்கள் PFC  அமைப்பு மகாராஷ்டிரா , புனே போன்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது . மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நிறுவியுள்ளோம் .குழந்தைகள் பிரச்னை சம்மந்தப்பட்ட எல்லா செய்திகளும் வெளியே தெரிவதில்லை . அப்படி தெரியவராத செய்திகளை அந்தந்த ஊர்களில் இருக்கும் எங்கள் PFC அமைப்பையோ அல்லது எங்களது TOLL FREE எண்னை அழைத்து தகவலை பகிரலாம் .

நீங்கள் உங்கள் ஊரில் இது போன்று PFC அமைப்பை உருவாக்கி குழந்தைகளுக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்க நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் . அதற்கான வழிமுறைகளை நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம் .