full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார்

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் மீராகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மத்திய மந்திரியாகவும், 5 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் மீராகுமார். 72 வயதாகும் இவர் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இவர் முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகளாவார்.