full screen background image
Search
Wednesday 24 April 2024
  • :
  • :
Latest Update

அடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்’, `லக்‌ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.

தற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2′ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார்.

ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்’ படம் ஜுன் 22-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.