full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

புறக்கணிக்கும் ஹீரோக்கள்.. இயக்குநர்களுக்கு தூது விடும் ராதிகா ஆப்தே!!

சினிமா உலகினை பொறுத்தவரை கதாநாயகர்களைப் போல, நாயகிகள் எளிதில் பேசிவிட முடிவதில்லை. அப்படி எதாவது ஒரு நாயகி துணிச்சலாக தனக்கு நேர்ந்ததை பேசும் போது, அவரை முற்றிலுமாய் ஓரங்கட்டி ஃபீல்டை விட்டே விரட்டி விடுவார்கள்.

அப்படித் தான், ராதிகா ஆப்தேவின் நிலைமையும் இப்போது ஆகியிருக்கிறது.

 

சமீபத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்த ஒரு ஹீரோவை அறைந்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதனால் அவர் மீது பல கதாநாயகர்கள் கோபத்தில் இருப்பதாகவும், தங்கள் படங்களில் அவர் வேண்டாம் என இயக்குநர்களிடம் பரிந்துரைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பதற்றமடைந்த ராதிகா ஆப்தே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை இயக்குநர்களுக்கு அனுப்பி வருவதாகவும், வாய்ப்புகளுக்காக நேரடியாக இயக்குநர்களிடம் பேசி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அதற்காக எடுத்த கவர்ச்சியான ஒருசில புகைப்படங்களைத் தான் ராதிகா ஆப்தேவின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்ததாகவும் சொல்கிறார்கள்.