full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

நாளை ஆர் கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.

அந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சசிகலா அணி சார்பில் தினகரன் மற்றும் சுயேட்சைகள் என 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 885 பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணம் மையமான ராணி மேரி கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

வேட்பாளர்களின் முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்குள் வெளியாட்கள் எளிதில் நுழைந்து விடாதபடி ராணி மேரி கல்லூரியை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை (24-ந்தேதி) காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் பணியில் 100 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 19 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேஜையிலும் ஒரு வாக்கு எண்ணிக்கை பணியாளர் தவிர ஒரு நுண் பார்வையாளர் இருப்பர். வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் உறுதி தன்மையை வெளிப்படுத்துவதற்காக வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளரால் ஒவ்வொரு மேஜையிலும் வெளியிடும் முடிவு அறிவிப்பின் நகல் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை முகவருக்கும் கொடுக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.