full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

கன்னட சினிமாவில் கால்பதிக்க இருக்கும் சிம்பு

சிம்புவை வைத்து படம் எடுத்து சிக்கலில் மாட்ட தமிழ் தயாரிப்பாளர்கள் யாரும் தயாராக இல்லை. மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்புவுக்கு வேறு படங்கள் எதுவும் இல்லை.

ஆனால் கன்னடத்தில் சிம்புவை நடிக்க வைக்க அங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி நடந்த போராட்டத்தின்போது சிம்பு கர்நாடகாவிடம் கேட்டுத் தான் தண்ணீர் வாங்க வேண்டும் என்று பேசினார்.

இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னட சமூக வலைதளங்கள் சிம்புவை பாராட்டி தள்ளின. கர்நாடகாவில் சிம்புவுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அவரை கன்னடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. தற்போது உருவாகி வரும் கன்னட படங்களிலும் சிம்புவை கெளரவ வேடத்தில் நடிக்க வைக்கவும், பாட வைக்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள் கன்னட சினிமாக்காரர்கள்.

ஒரு பாட்டுக்கு பாட வைத்து தங்கள் முயற்சியில் ஆரம்ப வெற்றியும் பெற்றுவிட்டார்கள். இருவடெல்லவா பெட்டு என்னும் படத்தில் ஸ்ரீதர் என்னும் இசையமைப்பாளர் சிம்புவை பாட வைத்து இருக்கிறார்.