full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

“சொல்லிவிடவா” – அர்ஜுன் ஓப்பன் டாக்!

‘ஜெய்ஹிந்த்-2’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘சொல்லிவிடவா’. தன் மகள் ஐஷ்வர்யாவை கதாநாயகியாக வைத்து இயக்கியிருக்கும் படத்தில், கன்னடத்தில் பல படங்கள் நடித்துள்ள சந்தன் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தைப் பற்றி நடிகர் அர்ஜுன் கூறும்போது,

“இது பக்கா கமர்ஷியல் படம். மக்களுக்கு என்ன பிடிக்குதோ அதைக் கொடுக்கணும். இப்போ எல்லாரும் காமெடி எதிர்ப்பார்க்குறாங்க. அதனால, யோகிபாபு,
சதீஷ், மொட்டை ராஜேந்திரன் மாதிரியான ஆர்டிஸ்ட்களைப் படத்துல கொண்டுவந்தேன். அப்புறம், கதைக்கு என்ன தேவையோ அதுக்குத் தகுந்தமாதிரி
நடிகர்கள் இருக்கணும். அதனால் தான் சுஹாசினி, பிரகாஷ்ராஜ் மாதிரியான சீனியர்களை படத்திற்குள் கொண்டு வந்தோம்.

சென்டிமென்ட், காமெடி, ஆக்‌ஷன் எல்லாமே படத்துல இருக்கும். அது எல்லாத்துக்குமே யாரெல்லாம் இருந்தா கதைக்கு ஒரு உயிர் கிடைக்குமோ
அவங்க எல்லாம் படத்துல இருக்காங்க” என்றார்.

மேலும், படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா ஜகுறியத்து கூறும்போது,

“இந்தப் படத்துல அவங்களோட திறமையை வெளிக்கொண்டு வரணும்னு நிறைய எமோஷன்களைச் சேர்த்து ஒரு வடிவம் கொடுத்திருக்கேன்.
நீங்கதான் எப்படி இருக்குனு பார்த்துட்டு சொல்லணும்” என்றார்.