full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி

2012 ல் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் கலகலப்பு. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

ஜீவா, ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, நடிகைகள் கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அதில் படக்குழுவினருடன் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி,

“ எனக்கு பேசவே தெரியாது. என்னைப் போய் கடைசியில் பேச சொல்லிவிட்டார்கள். என்னிடம் நிறைய பேர் கேட்டுக் கொண்டே இருந்தார்கள், கலகலப்பு 2 எப்போது எடுக்கப் பொகிறீர்கள் என்று. ஆனால் இரண்டாம் பாகம் எடுப்பது, சாதாரணாமானது இல்லை. பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு எதையோ எடுத்து விட முடியாது. அதனால், சரியான கதைக்காக காத்திருந்தேன். ரொம்ப நாள் கழித்து தான் எனக்கு இந்த தலைப்பிற்கு சரியான கதை கிடைத்தது. பிறகு 8 மாதகாலம் நேரம் எடுத்து திரைக்கதை ரெடி பண்ணினோம். ஒரே ஷெட்யூலில் 15, 20 ஸ்டார்களை வைத்து எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் எந்த சிரமும் இல்லாமல், எல்லாமே எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நல்லபடியாக

எல்லாம் முடிந்து படம் தயாராகிவிட்டது. படம் அடுத்த மாதம் திரைக்கு வந்துவிடும்.” என்றார்.

பின்னர், கலகலப்பு முதல் பாகத்தில் நடித்த நடிகர் சந்தானத்தை இந்த படத்திற்காக அணுகினீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,

“நாங்கள் அதை யோசிக்கவே இல்லை. ஏன்னா, அவர் ஹீரோவாயிட்டார். அதோடு இப்போதெல்லாம் காமெடியனுக்கு பஞ்சமே இல்லை. இன்டஸ்டரியில் டாப் ரேஞ்ச் காமெடியன்ஸ் 10, 15 இருக்கிறார்கள். முன்னாடி எல்லாம் கவுண்டமணி அண்ணன், விவேக் சார், வடிவேலு அண்ணன் இருந்த பொழுது, அவர்கள் மட்டும் தான் எங்களது தேர்வாக இருந்தார்கள். இப்போது அந்த நிலைமை இல்லை.” என்றார்.

மேலும் ரஜினி, கமல் இருவரை வைத்தும் படம் இயக்கியுள்ளீர்கள். இருவரும் அரசியலுக்கு வந்திருக்கும் இந்த சூழலில் உங்கள் ஆதரவு யாருக்கு? என்ற கேள்விக்கு,

கொஞ்சமும் யோசிக்காமல், “ரஜினிக்குத் தான் என் ஆதரவு என்றார். அதற்கு தனியாக ப்ரஸ் மீட் போடுவோம்.” என்று கூறி கலகலப்பூட்டினார்.

கலகலப்பு 2 படத்தை அவ்னி பிக்சர்ஸ் சார்பில் அவரது மனைவியும், நடிகையுமான குஷ்பு தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.