full screen background image
Search
Wednesday 24 April 2024
  • :
  • :
Latest Update

சென்னையில் மையம் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல்!!

பாலிவுட் பட உலகின் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன். இவர் பெயர் சொன்னாலே இளைஞர்களுக்கு புது உற்சாகம் பிறக்கும். சாதாரண்மாக ஒரு விழாவிற்கு வந்தால் கூட            அந்த ஏரியாவே திக்குமுக்காடிப் போகும் கூட்டத்தால்.

தமிழ் ரசிகர்களுக்கு சுன்னி லியோனை வெள்ளித்திரையில் முழுப்படத்திலும் காண வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருன்டு வந்தது. முன்பாக வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு அம்மணி ஆட்டம் போட்டிருந்தாலும், அது பெரிதாக வெளியே தெரியவில்லை.

அந்தக் குறையை போக்கி, முழுப் படத்திலும் நடிக்கும் படியாக செய்திருக்கிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான். “வீராமாதேவி” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பூஜைக்காகத் தான் சன்னி லியோன் சென்னையில் முகாமிட்டிருக்கிறார். பூஜை முடிந்து, தொடர்ந்து படப்பிடிப்பும் நடக்கவிருப்பதால் சன்னி லியோன் சென்னையிலேயே தான் தங்கவிருக்கிறார்.

வடிவுடையான் இதற்கு முன் எடுத்த படங்கள் வசூல் ரீதியில் பெரிதாக லாபத்தைத் தரவில்லை. கடைசியாக எடுத்திருக்கும் “பொட்டு” படமும் இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில் “வீரமாதேவி” படத்தைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறார் மனிதர். அதற்காகத் தான்                சன்னி லியோனை அதிக சம்பளம் கொடுத்து இறக்கியிருக்கிறார்.

ஒன்றும் தேவையில்லை, “வீரமாதேவி”யை ஏதாவது ஒரு ராணியின் கதை என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் கண்டிப்பாக படம் ஹிட் தான். அதற்கான வேலைகளை சம்பந்தப்பட்டோர் பார்த்துக் கொள்வார்கள்!