ஐந்தாம் தேதி ஐந்து படம்!

News
0
(0)

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், சமூக அக்கறை கொண்டவருமான சமுத்திரக்கனி சமீபத்தில் தேசிய விருதையும் வென்றிருந்தார். இயக்குநரான அவர், பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ள அவரின் இரு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.

அந்த வகையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும், விக்ராந்தும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் `தொண்டன்’ படம் வருகிற மே 5-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், தனராம் சரவணன் இயக்கத்தில் `மூடர்கூடம்’ நவீன் வெளியிடும் `கொளஞ்சி’ படமும் அதே நாளில் வெளியாகவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான போஸ்டர்களையும் இணையதளங்களில் படக்குழு பகிர்ந்து பகிர்ந்து வருகிறது. இவ்வாறாக இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசானால் ஏதாவது ஒரு படம் மட்டுமே வெற்றி பெறும் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் சினிமாவில் இருக்கிறது. எனவே கடைசி நேரத்தில் இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேநாளில் தான் ரஜினியின் சிஷ்யனான ஜீவா நடிக்கும் `ஆரம்பமே அட்டகாசம்’ படமும் ரிலீசாக உள்ளது. மேலும் கலையரசன் நடிப்பில் `எய்தவன்’, தன்ஷிகா நடிப்பில் `ராணி’, என மொத்தமாக 5 படங்கள் ரிலீசாக உள்ளன.

இதுதவிர சமுத்திரக்கனி `ஆண் தேவதை’, `கிட்னா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மே 5-ல் `தொண்டன்’, `கொளஞ்சி’, `எய்தவன்’, `ராணி’, `ஆரம்பமே அட்டகாசம்’ உள்ளிட்ட 5 படங்கள் ரிலீசாக உள்ளன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.