யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது – சிம்பு அதிரடி!

News
0
(0)

சிம்பு என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் சிம்பு தான். அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சிம்பு. காதலில் விழுவது, படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது என கிசுகிசுக்களும் பஞ்சாயத்துகளும் சிம்புவைச் சுற்றியே இருக்கும்.

இருந்தாலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் வந்தவண்ணமே இருக்கும். அந்த வகையில் தான் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் சிம்பு. அதுமட்டுமில்லாமல் இடைவெளியில், தான் அறிமுகப்படுத்திய நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் “சக்க போடு போடு ராஜா” படத்திற்கு முதன்முறையாக இசையமைத்து முடித்திருக்கிறார் சிம்பு.

சமீபத்தில் கூட, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில் சிம்புவால் தனக்கு 18 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்தில் நிலுவையில் இருக்கும் போது, சிம்பு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதில்’ “வரும் ஜனவரி மாதம் முதல் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும், தொடர்ச்சியாக 3 மாதங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், யாராலும் தான் நடிப்பதையும் தடுத்து நிறுத்த முடியாது” என்றும் கூறியிருக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.