இரண்டு லட்டு தின்ன ஆசைப்பட்ட சிம்பு

News
0
(0)

 

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் இரண்டு பாகங்களாக வெளிவருவதாக சமீபத்தில் சிம்பு அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் இப்படத்தில் சிம்பு, அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடுவது குறித்து திடீரென அறிவிப்பு வெளியானது அனைவரையும் ஆச்சர்யத்தையும், கேள்வியையும் எழுப்பியது. இதுகுறித்து சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்

அவர் கூறும்போது, இப்படத்தில் மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கதாபாத்திரங்களின் காட்சிகளை பார்த்தபோதே கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக சென்றது. எனவே, சிம்பு இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கலாம் என்று கூறினார். அதனால்தான் தற்போது அறிவித்தோம் என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் முதல்பாகம் ரம்ஜான் தினத்தையொட்டி வெளியாகவிருக்கிறது. இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகவிருக்கிறது. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.