கடினமான முடிவை எடுத்த அமீர்கான்

News
0
(0)

சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் நடித்துள்ள படம்‘2.0’. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் முதலில் தன்னைத்தான் ரஜினிக்கு பதில் ஹீரோவாக நடிக்கச் சொன்னதாக இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ”நான் ‌சங்கர் சார், ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ‘2.0’ படம் எடுக்க முடிவு செய்ததும் என்னை இந்த படத்தில் ஹீரோ பாத்திரத்தில் நடிக்கும் படி ‌சங்கர் அழைத்தார். தனது உடல்நிலை சரியில்லாததால் ‘2.0’ படத்தில் என்னை நடிக்கச் சொல்லும் படி அவரிடம் ரஜினி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல ரஜினி சாரும் எனக்கு போன் செய்து ‘2.0’ படத்தில் நடிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

‘2.0’ கதை சூப்பர். என்றாலும், அந்த படத்தை பற்றி நினைத்தாலே ரஜினி சார் தான் என் நினைவுக்கு வந்தார். என்னை அவருக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. எனவே, இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ரஜினி சாரால் மட்டுமே இதில் நடிக்க முடியும் என்று ‌சங்கரிடம் தெரிவித்து விட்டேன்.

‘எந்திரன்’ படத்தை நான் பார்த்து இருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ‘2.0’ படத்தில் நான் நடிக்க மறுத்தது கடினமான முடிவு. இப்போது ரஜினி நடித்துள்ள இந்த படம் அனைத்து மொழிகளிலும் நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகும்”.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.