களமிறங்கிய நிதின் சத்யாவுடன் கைகோர்த்த ஜெய்

News
0
(0)

`சென்னை 600028′ படத்தில் நண்பர்களாக வரும் ஜெய், நிதின் சத்யா ஒரு படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர்.

பல படங்களில் நடிகராக பார்க்கப்பட்ட நிதின் சத்யா, இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கி வரும் அந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை நிதின் சத்யாவின் ‘SHVEDH’ நிறுவனத்துடன், அவரது நண்பர் பத்ரி கஸ்தூரியும் இணைந்து தயாரித்துள்ளார்.

இது குறித்து நிதின் சத்யா பேசிய போது, “’தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி என்னிடம் ஒரு கதையை சொன்னார். தயாரிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாகவே தெரியும்.

இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானதாக இருப்பார் என எங்களுக்குத் தோன்றியது. அவரை அணுகி இக்கதையை சொன்னபோது அவருக்கும் கதை பிடித்துப் போக நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

எதிர்பார்த்ததை விட படம் வேகமாக உருவெடுத்து வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் மற்றும் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.” என்று கூறினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.