ஏற்றம் தந்த இயக்குநர் மீது வருத்தத்தில் இருக்கும் நடிகர்

Gossips
0
(0)

பறவை, விலங்கு பெயர்களில் காதல் படங்களை இயக்கிய அந்த இயக்குநர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ரயில் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், அந்த இயக்குநர் தற்போது அவருக்கு ராசியான விலங்கு படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் மூலம் புதிய நடிகரையும் அறிமுகப்படுத்துகிறாராம். இதனால் அந்த இயக்குநரால் ஏற்றம் பெற்ற தம்பி நடிகர் மனமுடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பறவை படத்தின் மூலம் தனது வாழ்க்கையில் ஒரு ஏற்றத்தைக் கொடுத்தது போல், விலங்கு படத்தின் இரண்டாவது பாகத்தின் மூலம் தனது மகனுக்கு வாய்ப்பளிக்கும்படி தம்பி நடிகர் இயக்குநரிடம் கேட்டிருந்தாராம். இயக்குநரும் நடிகரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாராம்.

ஆனால் இயக்குநர் வேறொரு நடிகரை வைத்து படத்தைத் தொடங்கிவிட்டாராம். இதனால் இயக்குநர் மீது வருத்தத்தில் இருக்கும் நடிகர், தனது வாழ்க்கைக்கு ஏற்றத்தை கொடுத்த இயக்குநர் என்பதால் அதனை பொறுத்துக் கொண்டாராம்.

மேலும் அவரது மகனின் முதல் படம் போதிய வரவேற்பைப் பெறாததால், அடுத்த படத்தை தாமே இயக்கவும் அந்த நடிகர் முடிவு செய்திருக்கிறாராம்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.