அஜித்திற்காக யோசித்தால் ஆயிரம் கதைகள்!

News
0
(0)

ரீமேக் படங்களை இயக்கியன் மூலம் ரசிகர்களால் ரீமேக் ராஜா என்று அன்போடு அழைக்கப்பட்டவர் இயக்குனர் மோகன் ராஜா.

ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் தனி ஒருவன் என்னும் ஒரே படத்தை எடுத்து, அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ராஜா அளித்த பேட்டியொன்றில் நடிகர் அஜித்தை இயக்குவது குறித்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில், “அஜித்திற்காக கதை உருவாக்க வேண்டும் என்று யோசித்தால் 1000 கதை வருகிறது, ஏனென்றால் மிக பெரிய நடிகரான அவருக்கு புதுமையான கதையை உருவாக்க வேண்டும். என்னிடம் ஒரு தயாரிப்பாளர் ஒருவர் கூட நீங்கள் அஜித் சாருடன் இணையலாமே என கூறினார், அஜித் சார் ஓகே சொன்னால் அடுத்த படத்திலேயே இணையத் தயார் ” என கூறியுள்ளார்.

அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கும் “விஸ்வாசம்” படத்தில் நடித்து வருடிறார். ஒருவேளை அந்த படம் முடிந்ததும் ராஜா-அஜித் கூட்டணி உருவானாலும் உருவாகலாம்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.