அஜித்

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு – அஜித்

News
0
(0)

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். பொது விழாக்களில் கலந்துக்கொள்ளாத அஜித், நடிகர் சங்கம் சார்பில் சமூகம் சார்ந்த போராட்டத்தில் இதுவரை கலந்துக்கொள்ளாமல் இருந்ததே இல்லை.

ஆனால், நேற்று முதன் முறையாக அஜித் நடிகர் சங்கம் அறிவித்து காவேரி மேலாண்மை அமைக்க கோரிய போராட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அனைவருமே அஜித் வந்திருக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

அஜித்

சில வருடங்களுக்கு முன் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு நிகழ்வு நடிகர் சங்கம் நடத்தியது, இதில் முதல் ஆளாக அஜித் கலந்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் அஜித் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று பலரும் வதந்தியை கிளப்பிவிட, முதன் முறையாக அஜித் மைக்பிடித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் ‘நான் தமிழர்களுக்கு எதிரானவனா?, யாரோ ஒருவர் நான் சொன்னதாக சொல்வதை எப்படி நீங்கள் நம்பலாம். மேலும், நண்பர் அர்ஜுனும் அப்படி சொன்னதாக சொல்கின்றனர், நாங்கள் ஒரு போதும் இப்படி ஒரு துரோகத்தை செய்யமாட்டோம்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு தான்’ என்று அஜித் கூறி விடைப்பெற்றார், ஆனால், அஜித் நேற்று ஏன் வரவில்லை என்று இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.