தமிழில் அறிமுகமாகும் அமிதாப் பச்சன்!!

News
0
(0)

பாலிவுட் உலகின் “டான்” அமிதாப் பச்சன். அவர் தமிழில் இதுவரையில் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. அந்தக் குறை இப்போது நீங்கிவிடும்
வாய்ப்பிருப்பதாக, தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அயன், மாற்றான் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். இந்த இரு படங்களிலுமே சூர்யா நடித்திருப்பார், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் படத்தில் தான் அமிதாப் பச்சன் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் அந்தப் படத்திற்காக அமிதாப் பச்சனிடம், இயக்குனர் கே.வி.ஆனந்த் பேசியிருப்பாதாகவும் சொல்லப்படுகிறது.
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் ஆகியோர் கதாநாயகிகளாக
நடித்திருக்கிறார்கள். “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அமிதாப்-சூர்யா கூட்டணி அமையலாம்!

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.