‘அறம் செய்து பழகு’ மாறும் : சுசீந்திரன்

News
0
(0)

மாவீரன் கிட்டு படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அறம் செய்து பழகு”.

சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள் தாஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. அன்னை பிலிம் பாக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார்.

நடிகர் கார்த்தி சமீபத்தில் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இத்திரைப்படத்திற்கான தலைப்பு மாற்றப்பட உள்ளதாகவும், புதிய தலைப்பு பற்றிய அறிவிப்பை இன்று மாலை 6.30 மணிக்கு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் வெளியிட உள்ளதாகவும் இயக்குநர் சுசீந்திரன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், புதிய தலைப்புடன் படத்தின் மோஷன் போஸ்டரை சுசீந்திரனின் தந்தையார் நல்லுச்சாமி வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.