அறம் காட்டிய அம்மா !  அழகும், திறமையும் கொண்ட சுனுலஷ்மி!

Special Articles
0
(0)

 

அறம் படத்தின் கதாநாயகிகள் 3 பேர்.

முதல் கதாநாயகி: ஆளுமை நிறைந்த பேரழகும் பெருந்திறமையும் கொண்ட கலைஞர் #நயன்தாரா.

இரண்டாவது கதாநாயகி: படம் நெடுகிலும் உணர்ச்சிப் பிழம்பாக நம்மை உருகிப்பதற வைக்கும், #அம்மா சுனுலஷ்மி.

மூன்றாவது கதாநாயகி: அறம் படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் நம் இதயத்துடிப்பை எகிற வைக்கும் குழந்தை #தன்ஷிகா (எ) #மகாலட்சுமி.

இதில் இரண்டாவது கதாநாயகியாக வரும் சுனுலஷ்மி அழகும் திறமையும் கொண்ட நடிகை, அற்புதமான பெல்லி நடனக்கலைஞர். அறம் படத்தில் சுனுலஷ்மி தன்னுடைய மிகைப்படுத்தாத நடிப்பால் இரண்டு குழந்தைகளின் தாயை நம் கண்முன் நிறுத்துகிறார்.
நீச்சலில் சாதனை படைக்கத்துடிக்கும் மகனுக்காக கணவனிடம் மிக நேர்மையாக வாதாடும் போதும், செல்லக்குட்டி மகள் தன்ஷிகாவிற்காக பரிதவிக்கும் போதும் நம்மை கையறு நிலையில் தள்ளி கண்களை நனைக்கிறார்.

இதற்கு முன்னால் பல படங்களில் சுனுலஷ்மி நடித்திருந்தாலும் அறம் திரைப்படம், சுனுலஷ்மியின் திறமையை ஊருக்கு காட்டியிருக்கிறது. அறம் காட்டிய அம்மா, தன் அடுத்தடுத்த பல படங்களில் முன்னேறி அடிக்க வாழ்த்துகள்.

– முருகன் மந்திரம்

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.