அருவி யார் மனதை புண்படுத்தினாள்?

News
0
(0)

ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும், பத்திரிக்கைகளும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொ ண்டிருக்கும் திரைப்படம் “அருவி”.
போலித்தனம் இல்லாத ஒரு சினிமாவாக, தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கும் “அருவி” படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

‘அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல.
இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!’’ என பொதுப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபு, யாரையும் குறிப்பிடாமல் இருந்தாலும், படத்தில் வரும் “சொல்வதெல்லாம் சத்தியம்” நிகழ்ச்சியை மனதில் வைத்தே இதைப் பதிவிட்டுருப்பார் என சொல்லப்படுகிறது.

இருந்தாலும் என்ன, இல்லாததையா பேசிவிட்டாள் அருவி? இதில் வருத்தப்பட யாருக்கு, என்ன இருக்கிறது?

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.