ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லோரும் எனக்கு உறவினர்கள் : கமல்ஹாசன்

News
0
(0)

சென்னைக்கு வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் சென்னை விமான நிலையத்தில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். அர்விந்த் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசிக்கொண்டதாக கூறப்பட்டது. இருவரும் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல், “டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் என்னை சந்திக்க கேட்டதையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர். எனது தந்தை காலம் முதலே அரசியல் தொடர்புடையவன் நான்.” என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், “நடிகர் கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகராகவும், நல்ல மனிதனாகவும் உள்ளார். நான் அவருடைய ரசிகன். ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது. நாட்டில் பெரும்பாலானோர் மதவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்டு உள்ளனர். கமல் அரசியலுக்கு வரவேண்டும்.” என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.