அதர்வாவை இயக்கும் சேட்டை இயக்குனர்!

News
0
(0)

பாணா காத்தாடி, பரதேசி உட்பட பல படங்களில் சிறப்பான நடிப்பின் மூலம் நன்கு அறியப்பட்டிருப்பவர் நடிகர் அதர்வா முரளி. இவர் இப்போது “செம்ம போத ஆகாத” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “இயக்குனர் ஆர்.கண்ணன் அவர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கப் போவது ஆர்.கண்ணன் தான் என்பது உறுதியாகியுள்ளது. இயக்குனர் ஆர்.கண்ணன் இதற்கு முன் ஜெயம்கொண்டான், சேட்டை, ஒரு ஊரில் ரெண்டு ராஜா ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

”டன் சேனல்” என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. விரைவில் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.