”கனவு படம்” குறித்து மனம் திறந்த அட்லி!!

News
0
(0)

ராஜா ராணி, தெறி வெற்றிப் படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் நேரடியாக வந்து அமர்ந்து கொண்டவர் இயக்குனர் அட்லி.

இப்போது தனது மூன்றாவது படமாக ”இளைய தளபதி” விஜய் நடிப்பில் தேனாண்டாள் ஃப்லிம்ஸின் நூறாவது படமாகிய மெர்சலை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடித்து தீபாவளி ரிலீசுக்குத் தயாராக வைத்திருக்கிறார். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பதும், படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் அட்லீ தனது கனவு படம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது,

பாகுபலி போல ஒரு வரலாற்றுப் படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை எனக்குள்ளும் இருக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என்பது என் கனவு என்றுகூட சொல்லலாம். பட்ஜெட்டும் நட்சத்திரங்களும் அமைந்தால் அதுபோன்ற ஒரு வரலாற்றுப் பிரம்மாண்டத்தைத் திரையில் நிச்சயமாகக் கொண்டு வருவேன். அதற்கான வயது இன்னும் எனக்கு இருக்கிறது. காலமும் சூழ்நிலையும் எனக்குத் தரும் வாய்ப்புகளைப் பொறுத்து அந்த கனவு பலிக்குமா என்பது தெரியும்.

என்று கூறினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.