கேப்டன்.. ஆக்சன் கிங்க்.. இவர்களுக்குப் பிறகு சுசீந்திரனிடம்!!

News
0
(0)

தமிழ் கினிமாவைப் பொறுத்த வரை காக்கி சட்டைக்கும், மிஷின் கன்’னிற்கும் பெயர் போனவர்கள் என்றால் அது விஜயகாந்தும், அர்ஜுனும் தான். இவர்கள் இருவரும் தாங்கள் நடித்த முக்கால்வாசி படங்களில் காவல்துறை அதிகாரிகளாகவே நடித்திருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் இருவரும் மிஷின் கன்னை எடுத்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் அழகே அழகுதான்.

என்ன காரணமோ, தமிழ் கினிமாவில் அவர்களுக்குப் பிறகு எந்த ஹீரோவுமே மிஷின் கன்னை பயன்படுத்துவதில்லை இப்போதெல்லாம். நீண்ட நாட்களாக நிலவி வரும் இந்தக் குறையை போக்க இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

தான் முதல் முதலாக நடித்து வரும் “சுட்டுப் பிடிக்க உத்தரவு” படத்தில் மிஷின் கன்னோடு இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்குப் பிறகு, குழந்தைகள் எல்லாம் தன்னைக் கண்டால் பயந்து நடுங்குவார்கள் என்று பீதியைக் கிளப்பியுள்ளார்.

“சுட்டுப் பிடிக்க உத்தரவு” படத்தில் விக்ராந்த், சுசீந்திரன், மிஷ்கின் மூவரும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.