அரசியல் படமா செக்கச் சிவந்த வானம்?

News
0
(0)

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த சென்சேஷன் “செக்கச் சிவந்த வானம்”. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஐஷ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி என ஒரு மிகப்பெரும் மாஸ் பட்டாளத்தையே தன் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் “வைரமுத்து – ஏ.ஆர்.ரஹ்மான்” ஆஸ்தான இணையோடு இப்படத்தையும் உருவாக்குகிறார்.

தமிழில் “மல்டி-ஸ்டார்” படங்கள் வருவது எப்போதாவது நடக்கும் அதிசயம். அப்படி அமையும் படி கதை செய்வதில் மணிரத்னம் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம். தளபதி, இருவர், ஆயுத எழுத்து போன்ற படங்களே அதற்கு சாட்சி.

இப்போதும் செக்கச் சிவந்த வானம் படத்தில் டிரெண்டில் இருக்கும் நடிகர்களை ஒரு படத்திற்குள் கொண்டு வந்து தன்னை தனித்து நிறுத்திக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். சமீபத்திய தகவலின் படி,

சிம்பு எஞ்சினியராகவும், விஜய் சேதுபதி காவல் அதிகாரியாகவும், அரவிந்த் சாமி அரசியல்வாதியாகவும் நடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அநேகமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அரசியல் படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.