இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகும் சேரன்!

News
0
(0)

இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவர்.                                            இவர் “வெற்றிக்கொடு கட்டு”, “பாண்டவர் பூமி”, “ஆட்டோகிராஃப்”,
“தவமாய்த் தவமிருந்து” என பொக்கிஷமாய் நிலைத்திருக்கும் படங்களுக்குச் சொந்தக்காரர். அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் தான் இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல்                “சென்னையில் ஒரு நாள்”, “யுத்தம் செய்”, “மூன்று பேர் மூன்று காதல்” போன்ற படங்களில் முத்திரை பதித்தவர்.

கடைசியாக “ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை” படத்தை இயக்கியது மட்டுமல்லாமல்,       “சி டூ எச்” என்ற புதிய வெளியீட்டுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். அந்த முயற்சி தந்த தோல்வியாலும், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சங்கடமான சூழ்நிலைகளாலும் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.

இப்போது மீண்டும் தனது இரண்டாவது ஆட்டத்திற்குத் தயாராகியிருக்கிறார் சேரன்.              ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் வெளியான “மழை” திரைப்படத்தை இயக்கிய ராஜ் குமார் இயக்கும் புதிய படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் நடிக்கவிருப்பது சேரன் கூறும்போது,

“சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் ராஜ் குமார் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். துப்பறியும் கதையம்சம் கொண்ட இப்படம் எனக்கு சிறந்த ரீஎண்ட்ரியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.