“தமிழ்ப்படம் 3” எப்போது? சி.எஸ்.அமுதன் விளக்கம்!!

News
0
(0)

கடந்த வாரம் 12-ஆம் தேதி வெளியாகி உலகமெங்கும் வசூலைக் குவித்து வருகிறது சி.எஸ்.அமுதனின் “தமிழ்ப்படம் 2”. குறிப்பாக தமிழகமெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்து வெளியானாலும், தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவா, சதிஷ், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

ஏற்கனவே நிறைய படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்திருந்தாலும், இப்படத்தைப் போல எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இதனால் இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக பலரும் பேசிக் கொள்கிறார்கள். ரசிகர்களும் இயக்குநர் சி.எஸ்.அமுதனிடம் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு சி.எஸ்.அமுதன், “இப்போதைக்கு தமிழ்ப்படம் மூன்றாம் பாகத்திற்கு வாய்ப்பில்லை, இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும்” என தெரிவித்துள்ளார். மேலும், அவரது இயக்கத்தில் உருவாகி கிடப்பில் கிடக்கிற “ரெண்டாவது படம்” வெளியீட்டிற்கான வேலைகளையும் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், ரெண்டாவது படத்தை எதிர்பார்க்க தொடங்கியுள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.