மகிழ்ச்சியில் தீபிகா படுகோன்!

News
0
(0)

கடும் எதிர்ப்புக்கு இடையே ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. வட மாநிலங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பயந்து போய் படத்தை திரையிடாமல் பின்வாங்கிவிட்டன. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் படம் வெளியாகவில்லை.

ஆனாலும் ‘பத்மாவத்’ படத்தை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. தியேட்டர்களில் முதல் காட்சியை காண முண்டியடித்தனர்.
பத்மாவத் படத்துக்கு டிக்கெட் வாங்கியதை படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

இது தீபிகா படுகோனேவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. “என் திரையுலக வாழ்க்கையில் பத்மாவத் முக்கிய படம். இந்த படத்துக்கு பெரிய
வரவேற்பு கிடைத்து இருக்கிறது. எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ரசிகர்கள் என்மீது அன்பு வைத்து படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவது
எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.