சீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்!!

News
0
(0)

தன்னைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், அடுத்தடுத்து புகார்கள் குவிந்தாலும் “துருவ நட்சத்திரம்” படத்தை வேகமாக முடித்தாக வேண்டும் என வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதேநேரத்தில் தாமதமாகியிருக்கும் தனுஷின் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இரண்டு படங்களையும் முடித்த பிறகு இந்த இரு படங்களையும் சில வார இடைவெளியில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் “துருவ நட்சத்திரம்” படத்தை மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். தகவலின்படி புனித் ராஜ்குமார் மற்றும் அனுஷ்கா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அருண் விஜய்யின் 25-வது படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்தது. இந்நிலையில் “துருவ நட்சத்திரம்” படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் விநாயகன் நடித்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். இவர் ஏற்கனவே தமிழில் “திமிரு” படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருக்கு “ஃப்லிம் ஃபேர்” விருது வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.