நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவை இயக்கும் பிரபல இயக்குனர்

News
0
(0)
சமந்தா, நயன்தாரா

சமந்தா, நயன்தாரா
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த படம் அறம். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.  கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் துணிச்சலான கலெக்டராக இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.
கவுன்சிலரை கைது செய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர். இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தன.
கோபி நயினார்
இதையடுத்து கோபி நயினார் அறம் படத்தின் 2-ம் பாகம் இயக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் சமந்தாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.