சங்கரின் வித்தியாச யோசனையில் உருவாகும் பாடல்

News
0
(0)

ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக இருக்கும் படம் `2.0′.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களில் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து வரும் நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. அந்த பாடலை சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம் கூடுதலாக இருக்கும். அதிலும் பாடல் காட்சிகளுக்காக விதவிதமான இடங்களில் பல வர்ணஜாலங்களை நிகழ்த்தி ரசிக்க வைப்பார். இந்நிலையில், அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் `2.0′ படத்தில் மீதமிருக்கும் அந்த ஒரு பாடலை முழுக்க முழுக்க ஸ்டூடியோவில் எடுக்க ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம்.

ஏ ஆர் ரகுமானின் ஒய் எம் ஸ்டூடியோவில் அந்த பாடல் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே அந்த ஸ்டூடியோவில் எடுக்கப்படும் முதல் படம் என்றும் கூறப்படுகிறது.

`2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27-ல் துபாயிலும், டீசர் நவம்பர் 22-ல் ஐதராபாத்திலும், டிரைலர் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.