
பொதுமுடக்கம் நீடிக்கும் இன்றைய சூழலில் இப்பாடலை படம்பிடித்தது பற்றி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது….

இப்பாடலின் முக்கிய அம்சமாக, வெகு அற்புதமான நடிகர்கள் இப்பாடலில் பங்கு பெற்றிருந்தாலும், நம் கவனத்தை ஈர்ப்பது இப்பாடல் படமாக்கப்பட்ட இடமான மொட்டை மாடி தான். அந்த இடங்கள் பாடலுக்கு பெரும் அழகை கூட்டுவதாக அமைந்திருக்கிறது. இயல்பாகவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் பாடல் படமாக்கம் எப்பொதும் தனித்தன்மை வாய்ந்ததாக, பின்னணி இடங்கள் அருமையாக இருக்கும். இப்பாடல் படமாக்காப்பட்ட இடம் பற்றி கூறும்போது… இந்த முழுப்பாடலும் எனது வீட்டு மொட்டை மாடியிலேயே படமாக்கப்பட்டது. மொட்டை மாடி என்பது இந்த பொது முடக்க காலத்தில் அனைவரும் அதிக நேரம் செலவிடும் இடமாக மாறியிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் இதனை வெகு நெருக்கமாக உணர்வார்கள். நடிகர்கள் தவிர்த்து மொத்தமாகவே 7 பேர் மட்டுமே எங்கள் குழுவில்

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தில் பணியாற்றி வரும் பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். உத்ரா மேனன் உடைவடிவமைப்பு செய்ய, சதீஷ் நடன இயக்கம் செய்துள்ளார்.