படம் பார்க்கும் ஆவலுடன் கெளதம் மேனன்

News
0
(0)

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் தற்போது `நரகாசூரன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.

அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தை கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

இப்படம் குறித்து கெளதம் மேனன் டுவிட்டரில் இட்டுள்ள பதிவில், “நரகாசூரன் படத்தின் 41 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்துவிட்டது. கார்த்திக் நரேனுக்கு பாராட்டுக்கள். தயாரிப்பாளராக இருப்பதால் படத்தை முதலில் பார்க்க முடியும். படத்தைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.