கல்தா கொடுத்த நடிகர்.. கலக்கத்தில் கௌதம்!

News
0
(0)

கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது வர வர அதிசயமான ஒன்றாகிவிட்டது. அவரது “எனை நோக்கி பாயும் தோட்டா”, “துருவ நட்சத்திரம்” படங்களே எந்த நிலையில்
இருக்கிறது என்று தெரியாத நிலையில் இருக்கிறது. இரண்டு படங்களையுமே “எஸ்கேப் ஆர்டிஸ்ட்” மதனோடு இணைந்து தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து “பொன் ஒன்று கண்டேன்” என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்லிசூப்புலு’
படத்தின் ரீமேக் ஆகும். இதில் தமன்னாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். புதுமுக இயக்குநர் செந்தில் வீராசாமி இயக்கவிருந்த இந்தப் படத்திருக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

நடிகர் விஷ்ணு திடீரென இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கால்சீட் பிரச்சனையால்
இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

விஷ்ணு தற்போது, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’, `ராட்சஸன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல், `வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு பிறகு,
எழில் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.