சத்யராஜுக்கு முன் கட்டப்பாவாக நடிக்க தேர்வானது இவர்தானாம்

Speical
0
(0)

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது.

இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது. இதன்மூலம் கட்டப்பா கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அப்போது அவர் சிறையில் இருந்ததால், சத்யராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இவ்வாறு சத்யராஜுக்கு எதிர்பாராமல் கிடைத்த அந்த கதாபாத்திரம், அவரது வாழ்வில் மறக்க முடியாததாக அமைந்தது. அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, சத்யராஜ் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.