தனது காதல் கைகூடியது எப்படி? – சொல்கிறார் காஜல்

Special Articles
0
(0)

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு பின் காஜல் அளித்த பேட்டியில், தனது காதல் கைகூடியது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: எனக்கு கவுதமை 10 வருடங்களாக தெரியும், 7 வருடம் நண்பர்களாக இருந்தோம், கடந்த 3 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தோம். இந்தாண்டு தொடக்கத்தில் கவுதம் என்னிடம் காதலை சொன்னார். அது ஒரு எமோஷனலான தருணம். பின்னர் ஏப்ரல் மாதம் என் பெற்றோரை சந்தித்து கவுதம் பேசினார். அவர்கள் சம்மதித்ததால் எங்கள் திருமணம் நிச்சயமானது” என அவர் தெரிவித்துள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.