ஜெய்க்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்

News
0
(0)

சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜோடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர்.

அடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜருகண்டி படத்தில் நடிக்கவும் ஜெய் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ளார். விமல் – சனுசா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இதில் ஜெய் ஜோடியாக ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா நடிக்கின்றனர்.

காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படம் பாம்பு பற்றிய கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெய் ஒரு ஐடி பொறியாளராக நடிப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.