அக்‌ஷய் குமார் படத்தில் ஜெயம் ரவி!

News
0
(0)

ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டிக் டிக் டிக்”. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இதற்கு அடுத்ததாக அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் “அடங்கு மறு” என்னும் படத்தில் நடிக்கிறார்.

மேலும், தனது 25-வது படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து இரண்டு படங்களுமே ஜெயம் ரவியின் மீது
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இவையில்லாமால் இன்னொரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி நாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “பேபி”. இப்படத்தின் தமிழ் பதிப்பில் தான், ஜெயம் ரவி
நடிக்கவிருக்கிறார். “என்றென்றும் புன்னகை”, “மனிதன்” படங்களை அஹமது இந்தப் படத்தை இயக்குகிறார். மதி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.